புனர்வாழ்வு பெற்று விசுவமடுவில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
விசுவமடு புதிய புன்னை நீராவி குமாரபுரத்தில் வசித்து வந்த மரிய ஜெபசேன் விஜிதன் (29) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நேற்று முன்தினம் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருகையில் முன்னாள்போராளியான இவர் மூன்று ஆண்டுகளாக புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடித்த இவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இன்னிலையில் கடந்த 11.11.18 அன்று இரவு வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளார் இவரின் உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவ மனை கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்று (13) நடைபெற்ற பிரேத பரிசோதனையினையடுத்து அவரது உயிரிழப்பு தொடர்பில்; உறுதியான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவித்த மருத்துவமனை மணர விசாரணை அதிகாரி அவரது மரபணுக்களை ஆய்விற்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
அதேவேளை முன்னாள் போராளியின் மரணம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்